திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி , இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் .
இதன்போது அவரை ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.









