ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவைச் சேர்ந்த ஒரு பெண் மீது 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை வழக்கில், மரண தண்டனைக் கைதி ஒருவரைக் கைது செய்ய பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடுகிறது.
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் கூறுகிறது.
பொலிஸாரால் தேடப்படும் குற்றம் சாட்டப்பட்டவர், ரணேபுர தேவகே ரணுக எரண்ட விஜேதுங்க என்ற 38 வயதுடைய நபர் ஆவார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 1604 என்ற எண்ணிலோ அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 962 7561 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.







