• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/24
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
72 0
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், தங்போது அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பௌத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய  – இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் இலங்கை படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளனர்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய – இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும்,  இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை – இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது.

ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும்.

இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

குறித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank

Related

Tags: கச்சதீவுபௌத்த விகாரைபௌத்தமயமாக்கல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

Next Post

சித்தார்த்தனை இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் – சஜித் எச்சரிக்கை!

Related Posts

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!
இலங்கை

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆசிரியர் தெரிவு

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!
இங்கிலாந்து

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை
இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இலங்கை

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
Next Post
மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை- நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக சஜித் அறிவிப்பு!

சித்தார்த்தனை இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் – சஜித் எச்சரிக்கை!

மக்களின் மனநிலையை அறிய உள்ளாட்சிசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் – லக்‌ஷ்மன் கிரியல்ல

மக்களின் மனநிலையை அறிய உள்ளாட்சிசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் - லக்‌ஷ்மன் கிரியல்ல

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் தேசிய சொத்து - வஜிர அபேவர்தன!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

0
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

0
பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24

Recent News

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 2 பில்லியன் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மீட்பு!

2025-12-24
காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காற்று மாசுபாடு; மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2025-12-24
13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

13 வயது பிரிட்டிஷ் சிறுவன் போர்த்துக்கலில் கத்தியால் குத்திக் கொலை!

2025-12-24
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.