தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 இல் நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான பரிசீலனை இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் PAFFREL அமைப்பினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.














