• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கூட்டம் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு மேற்கொண்டு, குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தீர்வுகளை செயல்படுத்துவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். தேசிய கொள்கைகள் மற்றும் சட்டங்களை இயற்றுதல், அதற்குத் தேவையான மனித, பௌதிக மற்றும் நிதி வசதிளை வழங்கும் நடவடிக்கை இந்தக் குழுவால் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

வனவிலங்குகளை இயற்கையின் ஒரு அங்கமாக கருதி, முடிவுகளை எடுப்பதே சிறந்த வழிமுறை என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, வனவிலங்குகளுக்கான வன உரிமையை அங்கீகரித்து தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள மாவட்டங்களுக்கு விரைவான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை வைத்திய பீடத்தின் போராசிரியர் அசோக்க தங்கல்ல இங்கு கருத்துத் தெரிவிக்கையில், செங்குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வுகளை அறிவியல் அணுகுமுறை மூலம் வழங்க முடியும் என்றும், விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எல்.ஆர்.சீ. மாரசிங்க, இந்தப் பிரச்சினைக்கு பன்முக அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வனவிலங்குகள் கணக்கெடுப்பில் இருந்து விலங்குகளின் எண்ணிக்கை குறித்த அடிப்படைத் தகவல்களைப் பெற முடிந்தமை இதன்போது மிக முக்கியம் என்றும், சமூக மனப்பாங்குகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெறுவது முக்கியம் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட குழுவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related

Tags: அரசாங்கம்வன விலங்குகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 பேர் உயிரிழப்பு!

Next Post

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

Related Posts

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
இலங்கை

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!
இலங்கை

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 
இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!
இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!
இலங்கை

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02
Next Post
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

மதுரை சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னை திரும்பியது!

மதுரை சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னை திரும்பியது!

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

0

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

0
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

0
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02

Recent News

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.