செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் 2026 பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் விரிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக வேரஹெர மற்றும் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அலுவலகங்களுக்கு மட்டுமே இந்த சேவை வரையறுக்கப்பட்டிருந்தது,
இப்போது குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய அலுவலகங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.












