பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (13) பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி பெரும்பான்மையைப் பெறும் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்த நிலையில் பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு இந்தியப் பிரதமர் எக்ஸில் இந்த வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர்,
பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு. தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி, பங்களாதேஷ் மக்கள் உங்கள் தலைமையில் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதேஷுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் – என்று கூறினார்.















