விருந்து உணவுகளுக்கான கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை விருந்து உரிமையாளர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் முதல் புதிய ஓர்டர்களுக்கான கட்டணங்கள் 15% முதல் 20% வரை உயரும் என சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
அதேநேரம், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட உணவுகளுக்கு 10% விலை உயர்வு விதிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி, புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை உயர்வால் ஒட்டுமொத்தத் தொழிலும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும், தொழிலதிபர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டது.












