துபாயிலிருந்து இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன.
இவ்வாறு திருப்பி விடப்பட்ட விமானங்களில் இந்தக் குழுவினரும் வருகை தந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மகாவத்த சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் இந்த பாதாள உலக உறுப்பினர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகாவத்த சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













