ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று (25) இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டிகளின் மூலமாக இலங்கை தனது புதிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை இன்று ஆரம்பிக்கிறது.
இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 7.30 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடரின் முதல் போட்டியில், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரியாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தாக்குதல் வரிசையை இலங்கை தேர்வு செய்துள்ளது.
அன்டிகுவாவில் நிலவும் சூழல் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என விருந்தினர் அணி எதிர்பார்ப்பதையே இந்த முடிவு உணர்த்துகிறது.
அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களுடன் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா வழிநடத்தவுள்ளனர்.
சுழல் பந்து கடமைகளை தனஞ்சய டி சில்வா மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் சோனல் தினுஷா பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



















