அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல மாறாக எதிர்க்கட்சியின் அரசியல் பாசாங்குத்தனம் மற்றும் சட்டத்தின் முன் சிறையில் அடைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே என்று இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி கூறுகிறது.
இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது முன்னணியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் (பிரதேசசபை உறுப்பினர்) நோயல் ஜோன்ஸ்டன் தேசிய அமைப்பாளர் மிலன் பி. பெரேரா மற்றும் பொருளாளர் ஜூலியானா ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர் நோயல் ஜெனாஸ்டன் டேனியல் ராஜபக்ச குடும்பம் என்றென்றும் ஆட்சியில் நீடிக்க வழிவகுத்த அரசியலமைப்பின் 18வது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது மௌனம் காத்தவர்கள் இப்போது 22வது திருத்தத்தின் முன் ஜனநாயகத்தின் சூப்பர்மேன்களாகத் தோன்றுகிறார்கள் என்று கூறினார். நாடு முழுவதும் குடும்ப ஆட்சி அமலில் இருந்தபோது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் மற்றும் பிறர் இன்று மக்களின் சுதந்திரத்திற்காக நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல்வாதிகள் ஜனநாயகத்தையோ மக்களின் உரிமைகளையோ பாதுகாப்பதற்குப் பதிலாகஇ தங்களின் குறுகிய அரசியல் இலக்குகளுக்காகச் செயல்படுகிறார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார். மேலும் அடுத்த சில மாதங்களில் ஏற்படக்கூடிய சட்ட நடவடிக்கைகளையும் சிறைத்தண்டனையையும் தவிர்ப்பதற்காகவே இந்தக் குழுக்கள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்













