• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பில் உள்ள முக்கிய பிரச்சினை: சபையில் காட்டமாக கேள்வியை முன்வைத்தார் சாணக்கியன்

1.153 Views
2 weeks ago
80 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    Subscriber

    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதியளித்தும் இன்னும் அந்த வசதி ஏற்படுத்தப்படவில்லையெனவும் மட்டக்களப்புக்கு கிடைக்கவேண்டிய குறித்த ஆய்வகத்திற்கான சில வசதிகள் களுத்துறைக்கு மாற்றப்பட்டமை தொடர்பாகவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடமே அவர் இந்தக் கேள்விகளையும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த நாட்டிலும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

    வடக்கு- கிழக்கில் சேவையாற்றும் வைத்தியர்கள், விசேடமாக பெண் வைத்தியர்கள், கடமையில் இணைந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே கர்ப்பகால விடுமுறையை எடுக்கிறார்கள். பின்னர் இரண்டு வருடங்களிலேயே வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

    வடக்கு- கிழக்கில் சேவையாற்றினால் இரண்டு வருடங்களில் இடமாற்றம் கிடைத்துவிடும் என்ற சட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை, நான் விசேடமாக, இங்கு ஒன்றைக் கூற வேண்டும்.

    மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதயவியல் பிரிவின் ஆய்வகம் ஒன்று இல்லாத விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே சுகாதார அமைச்சராகிய உங்களை வந்து சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். இதன்போது பிரதமரும் இருந்தார். இந்த சந்திப்பின்போது, நீங்கள் குறித்த ஆய்வகத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். எனினும், அது இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.

    அத்தோடு, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மட்டக்களப்பிற்கு வருகைத் தந்தபோது, உடனிருந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர், தனது மாவட்டத்தில் இருதயவியல் பிரிவின் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் எமது மாவட்டத்திற்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    இவ்வாறான நிலையில், குறித்த ஆய்வகம் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க முடியுமா எனக் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாறான ஆய்வகம் ஒன்று இல்லாமல் இருக்கிறது. இருதயவியல் பிரிவின் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் குறித்த வசதிகள் காணப்படுகின்றன.

    இதேவேளை, களுத்துறைக்கு மாற்றப்பட இருப்பதாக அறியக்கிடைக்கின்றது. ஆனால் அங்கிருந்து கொழும்புக்கான பயண தூரம் ஒரு மணித்தியாலங்களே, ஆனால் மட்டக்களப்புக்கு கிடைக்குமானால் பயனடையப்போவது கிழக்கு மாகாணம் முழுவதுமே.

    மட்டக்களப்பு அல்லது திருகோணமலையில் உள்ள ஒரு நோயாளி, குறித்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவதற்காக கொழும்புக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ எட்டு மணிநேரம் செலவழித்துப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திற்கே இதனை வழங்கக்கூடிய வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா” என சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்துள்ள சுகாதார அமைச்சர், ”மட்டக்களப்புக்குக் கொண்டுவரவிருந்த நிலைமையில் அங்கு காணப்பட்ட தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

    இதன்காரணமாக, களுத்துறையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாதிகளினால் கட்டுவிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஒப்பந்தத்தின் (Tender) அடிப்படையில் இது மட்டக்களப்பிற்கு வழங்கப்படும். இது தொடர்பாக நான் விபரமான அறிக்கை ஒன்றை அளிக்கிறேன்.

    இதேவேளை, ஒட்டுமொத்த நாட்டிலும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. வடக்கு கிழக்கில் சேவையாற்றும் வைத்தியர்கள், விசேடமாக பெண் வைத்தியர்கள் கடமையில் இணைந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே கர்ப்பகால விடுமுறையை எடுக்கிறார்கள். பின்னர் இரண்டு வருடங்களிலேயே வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதனாலேயே பற்றாக்குறை நிலவுகின்றது” என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், முதல் ஒப்பந்தத்தின் (Tender) அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட படி மட்டக்களப்பிற்கு வழங்கிவிட்டு அடுத்த ஒப்பந்தத்தின் (Tender) மூலம் களுத்துறைக்கு வழங்குமாறு சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Category: இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்
    Tags: இரா.சாணக்கியன்சுகாதார அமைச்சுமட்டக்களப்பு
    Share14Tweet9Send

    Related Posts

    வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் பெரும்பாலான பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை- சவேந்திர சில்வா
    இலங்கை

    வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் பெரும்பாலான பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை- சவேந்திர சில்வா

    April 20, 2021
    புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
    இலங்கை

    புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    April 20, 2021
    முல்லையில் சட்ட விரோத மீன்பிடி முறையை கட்டுப்படுத்த புதிய பொறிமுறை!
    இலங்கை

    முல்லையில் சட்ட விரோத மீன்பிடி முறையை கட்டுப்படுத்த புதிய பொறிமுறை!

    April 20, 2021
    தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை
    இலங்கை

    தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

    April 20, 2021
    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது
    இலங்கை

    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது

    April 20, 2021
    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!
    இலங்கை

    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரிப்பு!

    April 20, 2021
    Next Post
    காச்சலுடன் வாக்களிப்பு மையத்திற்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

    காச்சலுடன் வாக்களிப்பு மையத்திற்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    MOST POPULAR

    இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

    April 9, 2021
    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    March 25, 2021
    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    April 8, 2021
    சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

    புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

    April 7, 2021
    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    March 28, 2021
    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    March 28, 2021
    Load More
    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.