• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்

1.268 Views
4 days ago
88 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச ரீதியாக இலங்கை மக்களுக்கு நல்லதொரு பெயர் உள்ளது. சுற்றுலா வாசிகளுடன் நட்புறவுடன் பழகும் மக்களாகவே இலங்கையர்கள் இருந்து வருகிறார்கள்.

    எனினும், இலங்கையர்கள் தங்கள் நாட்டில் வாழ்வோருடன் அவ்வாறு பழகுவதில்லை. இதற்கு பல உதாரணங்கள் வரலாறு முழுவதும் இடம்பெற்றுள்ளன.

    ஈஸ்டர் தாக்குதல் குறித்து பேசும் முன்னர், இவ்வாறானதொரு சூழல் நாட்டில் ஏன் ஏற்பட்டது என்பதை ஆராயவேண்டும்.

    இலங்கை வாழ் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதில் சிறந்தவர்கள். இவ்வாறானவர்களை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்திக்கு ஏதேனும் பலனை பெற்றுக்கொள்ளத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

    ஆனால் அதனை விடுத்து, அவர்கள் தயாரிக்கும் உணவில் கருக்கலைப்பு மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் வைத்தியர்கள் கருக்கலைப்பில் ஈடுபடுவதாகவும் அந்தச் சமூகம் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

    இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.

    ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம்.

    இதுதொடர்பாக நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

    Category: இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்
    Tags: அரசாங்கம்இரா.சாணக்கியன்
    Share15Tweet10Send

    Related Posts

    பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் சாதனை!
    இலங்கை

    பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் சாதனை!

    April 11, 2021
    தென்னாபிரிக்காவின் மாறுபட்ட கொரோனா வைரஸ் ஃபைசர் தடுப்புமருந்தின் திறனை உடைக்குமாம்- ஆய்வில் தகவல்!
    உலகம்

    தென்னாபிரிக்காவின் மாறுபட்ட கொரோனா வைரஸ் ஃபைசர் தடுப்புமருந்தின் திறனை உடைக்குமாம்- ஆய்வில் தகவல்!

    April 11, 2021
    நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
    இலங்கை

    நாட்டில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

    April 11, 2021
    வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!
    இலங்கை

    யாழ். மாநகரில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை: மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

    April 11, 2021
    யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!
    இலங்கை

    யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது!

    April 11, 2021
    தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – கோவிந்தன் கருணாகரம் கேள்வி
    இலங்கை

    தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – கோவிந்தன் கருணாகரம் கேள்வி

    April 11, 2021
    Next Post
    கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். தொடர் நாளை ஆரம்பம்!

    கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். தொடர் நாளை ஆரம்பம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    MOST POPULAR

    இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

    April 9, 2021
    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

    March 25, 2021
    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

    April 8, 2021
    சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

    புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

    April 7, 2021
    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

    March 28, 2021
    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

    March 28, 2021
    Load More
    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.