• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

இலங்கையில் இறுதியாக பதிவாகிய மரணங்கள் குறித்த முழுமையான விபரம்

1.181 Views
5 years ago
82 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.

    இந்நிலையில் கடந்த 2021 மே  6 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்றினால் 15பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்துள்ளார்.

    இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

    அந்தவகையில் இறுதியாக பதிவாகிய 15 மரணங்கள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ”கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2021 மே 6 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

    அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2021 மே 8 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை மற்றும் நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2021 மே 9 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் ஹைபோதைரொயிட் நோய் நிலைமையே உயிரிழப்புக்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர், குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், குறித்த வைத்தியசாலையில் கடந்த 2021 மே 9 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண்ணொருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த வைத்தியசாலையில் கடந்த 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, கொவிட் நியுமோனியா, உக்கிர சுவாசக் கோளாறு சிண்ட்ரோம் மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த வைத்தியசாலையில் கடந்த 2021 மே 8 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சுவாசக் கோளாறு சிண்ட்ரோம் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

    பிபிலை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண்ணொருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 7 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண்ணொருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 மே 8 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணொருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 மே 7 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

    நேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 மே 8 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த  69 வயதுடைய பெண்ணொருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    போம்புவல பிரதேசத்தைச் சேர்ந்த  75 வயதுடைய பெண்ணொருவர், கடந்த 2021 மே 6 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாவுத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவர், கடந்த 2021 மே 6 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    மடோல்கெலே பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவர், கடந்த 2021 மே 6 ஆம் திகதியன்று மடோல்கெலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

    கொழும்பு 7 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், குறித்த வைத்தியசாலையில் கடந்த 2021 மே 8 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: கொரோனா வைரஸ்மரணங்கள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!
    ஆசிரியர் தெரிவு

    பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

    2025-12-03
    மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!
    இலங்கை

    மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

    2025-12-03
    தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!
    இலங்கை

    தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

    2025-12-03
    22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
    இலங்கை

    22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

    2025-12-03
    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
    ஆசிரியர் தெரிவு

    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

    2025-12-03
    இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!
    இலங்கை

    இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

    2025-12-02
    Next Post
    அவுஸ்ரேலியர்கள் மாலைதீவில் கைகலப்பு?

    அவுஸ்ரேலியர்கள் மாலைதீவில் கைகலப்பு?

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.