• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சித்த கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல்!

1.045 Views
1 year ago
72 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை ரிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவட்டித்திடல் பழைய கண்ணகி அம்மன் கோவில் அருகாமை குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

    அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த அதேவேளை, பல்வேறு தரப்பினருக்கும் பொது மக்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

    சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு கிராம சேவையாளர்கள் தமக்கு ஒத்துழைப்பதில்லை என இறுதியாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தெவானந்தாவுடனான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சட்டவிரோத மணவ் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கிராம சேவையாளர்களிற்கும் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

    குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் குவிக்கப்பட்டு ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் கிராம சேவையாளர் ரி.கலைரூபனுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த கிராமசேவையாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

    இதன்போது, சாரதி உட்பட 6பேர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேசிய கிராம சேவையாளருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த குறித்த குழுவினர், பின்னர் ரிப்பர் வாகனத்தினால் கிராம சேவையாளரை மோத முயற்சித்ததுடன், அச்சுறுத்தம் வகையில் நடந்த கொண்டதாக கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குறித்த ரிப்பர் வாகனத்திற்கு அனுமதிப்பத்திரம் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும், அப்பகுதி மணல் அகழ்விற்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை எனவும் தெரிவிக்கும் கிராம சேவையாளர், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையுடன் குறித்த சட்டவிரோத  செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த வாகனத்தின் சாரதி ஒட்டுசுட்டான் பிரதேச த்தை சேர்ந்தவர் எனவும், தன்னை அச்றுத்திய குறித்த செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த கிராம சேவையாளர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் இருவேறு அச்சுறுத்தலுக்கு ஏற்கனவே உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயலும் கிராம சேவையாளர்களிற்கு பாதுகாப்பு வழங்க தவறும் பொலிசார், மாவட்ட கூட்டங்களில் கிராம சேவையாளர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    Category: இலங்கை கிளிநொச்சி வட மாகாணம்
    Share12Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    வழமை போன்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை விநியோகம் செய்வதாக அறிவித்தது Lanka IOC!
    இலங்கை

    வழமை போன்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை விநியோகம் செய்வதாக அறிவித்தது Lanka IOC!

    2022-06-28
    முல்லைத்தீவு விசுவமடுபகுதிக்கு ஜப்பானிய தூதுவர் விஜயம்!
    இலங்கை

    முல்லைத்தீவு விசுவமடுபகுதிக்கு ஜப்பானிய தூதுவர் விஜயம்!

    2022-06-28
    பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?
    இலங்கை

    மீண்டும் அதிகரிக்கின்றது பேருந்து கட்டணம்?

    2022-06-28
    காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
    இலங்கை

    8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

    2022-06-28
    கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
    இலங்கை

    கண்ணிவெடி அகற்றும் பணி – ஜப்பானின் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

    2022-06-28
    எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!
    இலங்கை

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

    2022-06-28
    Next Post
    தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

    கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது - நீதி அமைச்சர்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.