• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்

1.626 Views
4 years ago
113 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின்  நிறைவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

    புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன், அதன்பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

    இதன்போது கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரியில், கிளிநொச்சி- உருத்திரபுரம், மாதவாக்கில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது கடந்த 2014 மார்ச்சில் வழக்கு  பதிவு செய்தார்.

    குறித்த முறைப்பாட்டுக்கமைய அதே ஆண்டு,  பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கண்ணதாசன், பல மாதங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

    மேலும்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    இதன்போது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    குறித்த மேன்முறையீட்டு மனு மீது  2ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

    இந்நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி,  குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார்.

    மேலும் கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

    இதன்போது வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், எதிரியை விடுவித்து விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Related

    Category: இலங்கை முக்கிய செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: இராமநாதன் கண்ணன்கண்ணதாசன்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 
    உலகம்

    உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

    2025-12-03
    சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
    இங்கிலாந்து

    சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

    2025-12-03
    வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது
    இங்கிலாந்து

    வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

    2025-12-03
    விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!
    இங்கிலாந்து

    விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

    2025-12-03
    அனர்த்தம் காரணமாக  மூடப்பட்டிருந்த  பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!
    இலங்கை

    அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

    2025-12-03
    மர்மமான MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!
    ஆசிரியர் தெரிவு

    மர்மமான MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

    2025-12-03
    Next Post
    மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

    மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.