இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 19 இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3 இலட்சத்து 83 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 527 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.