கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மண்டலத்தின் புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அவர் ஜூலை 24 அன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு மண்டலத் தளபதியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். இந்தப் புதிய பதவிக்கு மேலதிகமாகஇ ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே இலங்கை கடற்படையின் பிரதி தளபதியாகவும் பணியாற்றுகிறார்.













