• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்

shagan by shagan
2021/11/16
in இலங்கை
72 0
A A
0
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – பிரதமர்
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை வழங்கினார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில்  நாடாளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே   பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.

தற்போதைய தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தடுத்து வைக்காது பாதிக்கப்பட்ட 31,475 பேரை இதுவரை அவர்களது சொந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே 21 மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. முதற்கட்ட இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தாமதமின்றி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 15,000 குடும்பங்கள் அதிக அபாயம் மிகுந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இதுவரை 3000 குடும்பங்கள் மாத்திரமே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, தற்போது அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு  பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆபத்தான சூழ்நிலையை கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, இந்த மக்களை ஆபத்தில் இருந்து மீட்க திட்டமிடவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

மீள்குடியேற்றத்திற்காக காணிகளை சுவீகரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷ கவனத்திற்கு கொண்டு வந்தார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தீர்வு காண்பது என இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

கனமழை காரணமாக மண்சரிவு, பலத்த காற்று, வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 262,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் நிலவும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி இடம்பெற்று வருவதனால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்கள் நீண்டகாலமாக இனங்காணப்பட்டு வருவதால் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு கண்டி பிரதான வீதி கடுகன்னாவையுடன் மூடுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்காக திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறு இன்றேல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று வழி பாதையை விரைவில் அபிவிருத்தி செய்யுமாறும் கௌரவ பிரதமர் இதன்போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

குறித்த கலந்துரையாடலில்  அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா தேவி வன்னஆராச்சி, டளஸ் அழகப்பெரும, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, சரத் வீரசேகர மற்றும்   இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, கனக ஹேரத், சனத் நிசாந்த, ஜீவன் தொண்டமான், ரொஷான் ரணசிங்க,  நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்ஜீவ எதிரிமான்ன, சுதர்ஷன தெனிபிடிய, வசந்த யாப்பா பண்டார, ராஜிகா விக்ரமசிங்க, கலாநிதி சுரேன் ராகவன், பிரதமரின் செயலாளர்  காமினி எஸ்.செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ
இலங்கை

அமெரிக்காவின் கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ

2022-06-25
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!
இலங்கை

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

2022-06-25
ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு!

2022-06-25
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !
இலங்கை

அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று முடிவு!

2022-06-25
பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
இலங்கை

பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

2022-06-24
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் / அமைச்சராக பதவியேற்கமாட்டேன் – தமிக்க பெரேரா
இலங்கை

தம்மிக்க பெரேரா இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம்?

2022-06-24
Next Post
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

இலங்கையில் 5 இலட்சத்து 53 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

2022-05-26
வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

அமெரிக்காவின் கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ

2022-06-25
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

2022-06-25
ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு!

2022-06-25
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று முடிவு!

2022-06-25
பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

2022-06-24

Recent News

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

அமெரிக்காவின் கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ

2022-06-25
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

2022-06-25
ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு!

2022-06-25
புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று முடிவு!

2022-06-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.