• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை – அனந்தி

1.284 Views
4 years ago
89 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    0 Subscriber

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொதுவெளிக்கு வர வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் தினம். அதேபோல மே 18ஆம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக  ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.

    முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை கூறி கொத்தணி உருவாகுவது போல் மாஜையை காட்டினார்கள்.

    எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள்.

    கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்

    இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டியவேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும்.

    உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை.

    வெறுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.

    இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி இந்த விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: அனந்தி சசிதரன்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!
    இலங்கை

    நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

    2025-06-15
    மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்
    இலங்கை

    மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

    2025-06-15
    விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
    இலங்கை

    விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

    2025-06-15
    பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு
    இலங்கை

    களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

    2025-06-15
    அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!
    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

    2025-06-15
    சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!
    இலங்கை

    நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

    2025-06-15
    Next Post
    மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் – சன்ன ஜயசுமன

    மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் - சன்ன ஜயசுமன

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.