• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/26
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 1
A A
0
55
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (Antonio Guterres) ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பிரதிபலனாகவே, கலீட் கியாரி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அன்டோனியோ குட்ரெஸின் வாழ்த்துகளை ஜனாதிபதிக்கு தெரிவித்த கலீட், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சுற்றாடல் தொடர்பாக காட்டும் ஆர்வம் மற்றும் நோக்கு பற்றி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த உதவிப் பொதுச் செயலாளர், அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கையின் ஆர்வத்தை பாராட்டினார்.

கடற்படையின் பங்களிப்புடன் கண்டல் தாவரக் கன்றுகள் ஒரு இலட்சத்தை நடுவதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களின் மூலம் காலநிலை இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

கொரோனா தொற்றுக் காலத்தில், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்வதற்கும் ஏனைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொவெக்ஸ் வசதிகள் ஊடாக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் அப்பிரதேசங்கள் துரித வளர்ச்சி கண்டதாகவும், ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தருகின்ற அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்துச் செயற்படும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் தாம் டயஸ்போராவுக்கு விடுத்த அழைப்பையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். அதுபற்றி நல்லெண்ணத்துடன் செயற்படுவார்களென்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் உறவுகள் தொடர்பாக இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று இலங்கையில் காணப்படுகின்றது.

நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார் என்றும் நீதியரசர் ஒரு தமிழராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு விசேட பதவிகளை வகிப்போர் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதாகவும் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு கல்வி அடிப்படையாக அமையும் என்பது இரு தரப்பினரதும் கருத்தாகும்.

தென்னாபிரிக்கா, இனவாதச் செயற்பாடுகளை ஒழித்துக்கட்டி முன்னோக்கிச் செல்வதற்காக பின்பற்றிய செயற்பாடுகளை ஆய்வு செய்து, அது தொடர்பாக கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களின் மூலம் செயற்படுத்த முடியுமான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி (Hanaa Singer – Hamdy), ஐக்கிய நாடுகள் சபையின்  அரசியல் மற்றும் அமைதி நடவடிக்கைகள் துறையின் (DPO)  அரசியல் அதிகாரி ஷியாக்கி ஓடா (Chiaki Ota), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Related

Tags: Khaled Khiariஐக்கிய நாடுகள் சபைகலீட் கியாரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

Next Post

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

Related Posts

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்
இலங்கை

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

2025-12-18
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு-  தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!
இந்தியா

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

2025-12-18
இலங்கை

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!
இங்கிலாந்து

மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

2025-12-18
160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
இந்தியா

160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

2025-12-18
Next Post
கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடமே உள்ளது: மைத்திரிபால தெரிவிப்பு

நீதிமன்றில் முன்னிலையாகும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை!

நீதிமன்றில் முன்னிலையாகும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

0
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு-  தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

0

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

0
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

2025-12-18
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு-  தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

2025-12-18

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!

2025-12-18

Recent News

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

2025-12-18
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு-  தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

2025-12-18

பேராதனை கருப்பு பாலம், களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!

2025-12-18
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும் – அரசாங்கம் நம்பிக்கை!

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.