நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் சபாநாயகர், துணை சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் தலைமைக் கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லும், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுரகுமார திசாநாயக்க, ரிசாத் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கிறனர்.














