• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொது இடத்தில் மோதிக்கொண்ட விமல் – பசில் ஆதரவாளர்கள்!!

நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் பசில் ராஜபக்ஷவினால் முடியும் – விமல் பகிரங்க குற்றச்சாட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/04
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
109 1
A A
0
48
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

பசில் ராஜபக்ஷ எனும் தனி ஒரு நபரின் செயற்பாடுகளால் இன்று ஒட்டுமொத்த நாடும், நாட்டின் பொருளாதாரமும் பதாளத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஜனாதிபதியின் கீழ் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதிவியிலிருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டதையடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே எமது தரப்புக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஏனெனில் பசில் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை தனது சொந்தக் கட்சியாக நினைத்து செயற்பட ஆரம்பித்தார்.

ஆனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக தகுதியானவர் என கருதி, நாம் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

இது பசில் ராஜபக்ஷவின் கனவுக்கு தடையாக அமைந்தது. இறுதியில் அவரும் விருப்பப்படாமல் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக வேலை செய்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதியிடம் சென்று தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு பசில் ராஜபக்ஷ கோரினார்.

இதனை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இறுதியில், யாருக்கும் சொல்லாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்தன. 20 ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து இது ஆரம்பமானது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு அமைச்சர் அந்தஸ்த்து வழங்கியமை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியமை என அனைத்து விடத்திலும் நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம்.

இது கொள்கை ரீதியான முரண்பாடாகும். இதனால் தான் இன்று ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் நாம் மக்களுக்கு எடுத்துக் காட்டினோம். நாடு பள்ளத்தில் விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டோம் என என்னையும் உதயகம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளிலிந்து நீக்கியுள்ளார்கள்.

எம்மை நீக்கியமையால் நாட்டுக்கு டொலர் கிடைத்துவிடுமா? அல்லது எரிப்பொருள் ஊற்றெடுக்குமா? மின்சாரப் பிரச்சினைகள் இல்லாது போகுமா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

அத்தோடு, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றுக்கு கொண்டுவர நாம் என்றும் ஆதரவளிக்கவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்ப்பினைத் தான் வெளியிட்டோம்.

பசில் ராஜபக்ஷவினால் தான் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிரஜையாவார்.

அமெரிக்கா நினைத்தால் நிதித்தூய்மையாக்கலின் கீழ் அவரை எந்நேரத்திலும் கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்ப வேண்டுமெனில் அவர் அமெரிக்காவுக்காக இங்கு சேவையாற்ற வேண்டும்.

இந்தோனேசியாவைப் போன்று இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாகும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவர் செயற்பட்டு வருகிறார்.

நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் அவரால் முடியும். இதுதான் இன்றைய உண்மையான கதை.

எம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு பிரதமர் உடன்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதியின் கீழ் இனி மேல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷதான் வழிநடத்துகிறார். ஜனாதிபதியால் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட முடியாதுள்ளது. இதுதான் இன்றைய நிலைமை.

இவை தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்மை நீக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்திலுள்ள நிறைய பேருக்கு இந்த நிலைமை புரிந்துள்ளது. அவர்களும் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. நாம் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தோம். இதற்காக கதைத்தால் எமது பதவிகள் பறிபோகும் என்றால் நாம் கவலையடையப்போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: கொள்ளைபசில் ராஜபக்ஷவிமல் வீரவன்ஸ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 04 03 2022

Next Post

தலைவலிக்காக தலையணையை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது – இராதாகிருஷ்ணன்

Related Posts

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!

2025-12-19
வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 
இலங்கை

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

2025-12-19
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

2025-12-19
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

2025-12-19
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!
இலங்கை

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

2025-12-19
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன்  தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!
இலங்கை

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

2025-12-19
Next Post
தலைவலிக்காக தலையணையை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது – இராதாகிருஷ்ணன்

தலைவலிக்காக தலையணையை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது - இராதாகிருஷ்ணன்

அமைச்சராகின்றார் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம?

போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம!

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்!

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!

0
வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

0

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!

2025-12-19
வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

2025-12-19
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

2025-12-19
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

2025-12-19
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

2025-12-19

Recent News

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!

2025-12-19
வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

2025-12-19
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

2025-12-19
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.