தமிழ் மக்களின் இன அழிப்பின் முள்ளிவாய்க்கால் மே 18 மறக்கமுடியாத ஒருநாள் இந்த முள்ளிவாய்காலில் 58 வது 59 படைப் பிரிவால் நடந்தேறிய இந்த இன படுகொலை பற்றிய போர்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும். போர் குற்றத்தில் இருந்தவர்கள், செய்தவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று (புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் “மே 18 என்பது முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கான நாள் எமது மக்கள் கெத்துக் கொத்தா கொல்லப்பட்ட நாள் எமது போராட்டம் நசுக்கப்பட்ட நாள் எனவே உலகிலுள்ள தமிழ் மக்கள் இந்த நாளை மறக்கமுடியாது
அன்று எமது மக்கள் ஒவ்வொருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் ஆனால் மன உறுதியை மட்டும் விட்டுவிடவில்லை. அப்போது எங்களை அழிக்கும் போது கும்மாளமிட்டவர்கள் சிங்கள மக்களுக்கு கீறேவாக தெரிந்தவர்கள் இன்று அதே சிங்கள மக்களுக்கு வில்லனாக தெரிகின்றனர்.
எமது போராட்டம் மளுங்க வைப்பதற்கான பல துரோகத்தனங்கள் நடந்தது. போர் முடிந்ததும் தமிழ் மக்களின் வலியை அறிந்து கொள்ளாமல் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அளுத்தங்களை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டு நிலங்களை அபகரித்தனர் எமது பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தனர் .
ஆனால் இன்று அவர்களுக்கு உறங்குவதற்கு வீடு இல்லாமல் எங்கு ஓடி ஒழிப்பது என தெரியாது ஓடி ஒழிந்து நாட்டுக்குள் அகதியாக வழவைத்தது அந்த முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களின் செயலாகும்.
சிங்கள பேரினவாதம் அவர்களுக்கு ஒரு பாதகமான நிலை வரும்போது 2015 ஆண்டு தமிழ் தலைமைகளை பாவித்ததுபோல இந்த காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் இந்த போராட்டத்தில் பயன்படுத்து முற்பட்டனர்
இந்த காலிமுகத்திடல் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டமல்ல ஆட்சியை மாற்றுமாறு செய்யப்படும் போராட்டம். எனவே இந்த போராட்டத்தில் ;பாதுகாப்பு படையினரால் தமிழ் மக்களளுக்கு நடந்த அநீதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலங்கள் மீண்டும் தமிழ் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என குரல் கொடுக்கவில்லை
எனவே மகிந்த, ரணில் இருந்தால் என்ன எதிர்கட்சியில் சஜித் இருந்தால் என்ன நாங்கள் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக இல்லாத பட்சத்தில் எங்களை சிங்கள பேரினவாதம் அழித்துக் கொண்டிருக்கும்
மே 18 கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்த சிங்கள பேரினவாதம் இன்று இன ஒற்றுமையை பற்றி பேசுகின்றனர். எனவே 2015ஆம் ஆண்டு ஏமாற்றப்பட்டது போல மீண்டும் ஏமாற்றுப்க்கூடாது அப்போது கண்ணைமூடிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தாங்கள் தான் தியாகிகள் என அடுத்த தமது அரசியலுக்காக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை பயன்படுத்தக் கூடாது இது எமது மண்ணின் மக்களது இழப்பு இதில் அரசியல் இலாம் தேடவேண்டாம்
முள்ளிவாய்காலில் நடந்தேறிய இன அழிப்பை முதல் முதல் உலகத்துக்கு சொல்ல வந்தவன் நான் தான் ஆகவே முள்ளிவாய்காலில் நடந்த வேதனையும் தெரியும் அதன் உண்மையும் தெரியும் காலத்துக்காக பொறுத்துக் கொண்டிருந்தேன் காலம்வரும் போது அங்கு நடந்த சில விடையங்களை தெரிவிப்பேன்” என அந்த அறிக்கையில சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.