சைப்ரஸில் உள்ள ரோயல் எயார் ஃபோர்ஸ் ( RAF) தளத்தில் சட்ட விரோதமான கண்காணிப்பை மேற்கொண்ட குற்றஞ்சாட்டில் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் இது தொடர்பான தகவல்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் அவர் பகிர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாட்டு குடியுரிமை பெற்றவரான 44 வயதான சந்தேகநகர் கடந்த 17ஆம் திகதி சைப்ரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில், சந்தேகநபரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அரசுத் தரப்பு வழக்குத் தொடுப்பு சேவை அனுமதி வழங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
இதேநேரம் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் எந்தவொரு பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் , இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்திருந்த அமெரிக்க-பிரிட்டிஷ் இராணுவத் தளம் மீது ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும், இரண்டுமே இலக்கைத் தாக்கவில்லை.















