• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

2.254 Views
4 years ago
156 2
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை  மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் நாடாளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தில் குறித்த கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் கூறியுள்ளார்.

    இந்த தகவல்களை வெளியிட்டதற்காக கோப் குழுவிலிருந்து என்னை நீக்கினாலும் அது தொடர்பில் கவலைகொள்ளப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

    மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

    தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார்.

    அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

    இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில்  நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

    .குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

    லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள்.தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

    இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது.இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.

    கடன்பெறப்போகும்போத வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே.ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!
    இலங்கை

    பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!

    2025-12-05
    இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!
    இலங்கை

    இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!

    2025-12-05
    நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில்  மிதந்துவந்த  ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் உட்பட பல பொருட்கள்!
    இலங்கை

    நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் மிதந்துவந்த ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் உட்பட பல பொருட்கள்!

    2025-12-05
    இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!
    இலங்கை

    இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!

    2025-12-05
    ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!
    இலங்கை

    ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!

    2025-12-05
    கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
    இலங்கை

    கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

    2025-12-05
    Next Post
    இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

    மக்கள் கோரினால் மஹிந்த மீண்டும் வருவார் என்கின்றது பொதுஜன பெரமுன

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.