• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

எனக்கு 5 வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது...!

Dhackshala by Dhackshala
2022/06/07
in இலங்கை, முக்கிய செய்திகள்
80 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும் தனது பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களையும் முடிப்பதாக தெரிவித்த அவர், மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு தனது வெற்றிகரமான சேவைகளை பிரதிபலிக்க விரும்புவதாக ஜனாதிபதி கூறினார்.

6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முழுமையாக இரத்து செய்து வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனால் அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எரிபொருளில் இருந்து மருந்து வரை கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தமை, பணவீக்கத்தை 40வீதமாக உயர்த்தியமை மற்றும் வரலாற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வழிவகுத்தமை என கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மே மாதத்தில் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் இரத்தக்களரியாக மாறிய பின்னர், நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் டொலர் உதவியை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு!

Next Post

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த இளைஞன் குறித்து வெளிவந்த தகவல்!

Related Posts

நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்
மலையகம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்
இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
யாழ்ப்பாணம்

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

2026-01-13
Next Post
அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்த இளைஞன் குறித்து வெளிவந்த தகவல்!

31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி!

இந்தியாவிடம் இருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ். விவசாயிகளுக்கு இன்று முதல் எரிபொருள் அட்டைக்கு மண்ணெண்ணெய்!

யாழ். விவசாயிகளுக்கு இன்று முதல் எரிபொருள் அட்டைக்கு மண்ணெண்ணெய்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

0
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13

Recent News

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.