அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் உருவானால் தற்போதைய நெருக்கடியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார்.