• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உறுதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/28
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுடில்லியில் நடைபெற்ற 10ஆவது இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உரையாடலின் போது, இரு தரப்பினரும் அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களாக, அவை அனைத்து மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை, பிரிவின்மை, ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகியவற்றை வலியுறுத்துவதாக தெரிவித்தன.

அத்துடன் குறித்த உரையாடல் மனித உரிமைகள் தொடர்பான பரந்த அளவிலான விவாதங்களுக்கு இடமளித்ததோடு, ஏப்ரல் 2021இல் நடந்த இறுதி உரையாடலில் பின்னரான சூழலில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமது அணுகுமுறைகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை கோடிட்டுக்காட்டியிருந்தன.

இந்த உரையாடலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஐரோப்பாவின் இணைச் செயலர் சந்தீப் சக்ரவர்த்தி மற்றும் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் உகோ அஸ்டுடோ ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகள், மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பெண்கள் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள், வணிக உரிமைகள், பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி பேரிடர் நிவாரணம் ஆகியன பற்றி விரிவாக கலந்துரையாடின.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் சமூகத்தினரின் சுதந்திரம், மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதோடு,  அமைதியான ஒன்றுகூடல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடிய தனித்துவமான, உலகளாவிய, தவிர்க்க முடியாத மற்றும் அடிப்படை மனித உரிமையாக வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில், மனித உரிமைகள் விவகாரங்களில் அதிக ஈடுபாட்டை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெளிப்படுத்தின.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆற்றும் பங்களிப்பை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா வழிகாட்டுதல் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரஸ்பரம் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம், தனியார்துறை நிலைத்தன்மை குறித்த அதன் சமீபத்திய முயற்சிகளை இந்தியத் தரப்புக்கு தெரிவித்தது. வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் முதல் தேசிய செயல்திட்டத்தின் நிலை குறித்து இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தை புதுப்பித்தது.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்.

பூகோள ஆய்வறிக்கை பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் துறையில் சர்வதேச அரங்கில், குறிப்பாக ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் உட்பட பலதரப்புவாதத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.

50ஆவது அமர்வின் பக்க நிகழ்வுகளின்போது, பாலின சமத்துவம், நீர் மற்றும் சுகாதாரம் குறித்த  விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதோடு, ஜெனிவாவில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கூட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜி-20 அமைப்பின் இந்தோனேசிய தலைமையை உறுதி செய்த இந்தியா

Next Post

ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

Related Posts

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!
இந்தியா

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!

2026-01-18
கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!
இந்தியா

கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!

2026-01-17
இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்
இந்தியா

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் – மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!

2026-01-16
அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!
இந்தியா

அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்!

2026-01-14
மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !
இந்தியா

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !

2026-01-13
PSLV C  62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!
இந்தியா

PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

2026-01-12
Next Post
மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18

Recent News

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.