• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தடைநீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன்

1.004 Views
3 years ago
70 0
0
Share
Facebook Twitter WhatsApp
    ஏ.பி. ஏ.பி.
    0 Subscriber

    வடக்க – கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுக்களில் ஈடுபடவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

    இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தமிமீழ விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசாங்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்ததன் அடிப்படையல், ஓர் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது.

    உருவாக்கப்பட்ட அந்த இடைக்கால நிர்வாகம் எழுத்துருவுடன் முடிவு பெற்றது.

    அதன் பின்னர் சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் எல்லைமீறிய அதிகார வரம்பு செயற்பாடுகளால் அந்த சுனாமி கட்டமைப்பும் செயற்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

    சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்டபொழுது உலக வங்கியினுடைய ஆதரவு இருந்தது.

    நிதிகளை கையாள்வதற்கான முறையான கட்டமைப்பு உலக வங்கியின் கண்காணிப்பில் இருந்தது.
    அதற்கு முன்னர் இந்தியாவின் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் இந்தியாவின் மேற்பார்வையுடன் உருவாக்கப்பட்டது.

    தற்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடைக்கால நிர்வாக கட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து, அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விடயம் தொடர்பாக கடந்த 5 ஆம் மாதமே பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துரையாடியிருந்தோம்.
    கடந்த 3 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டத்தில் வடக்கு – கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிந்துரை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன்.

    அது தொட்பில் பரிசீலிக்கலாம் என்ற செய்தி அங்கு சொல்லப்பட்டிருந்தது.

    இப்பொழுது, தன்னால் எதுவும் செய்ய முடியாது, தன்னுடைய இயலுமையை இழந்துகொண்டு செல்கின்ற டக்ளஸ் தேவானந்தா, தான் இருப்பதாகவும், அக்கறை செலுத்துபவனாகவும் காட்டிக்கொள்வதற்காக அவர் இடைக்கால நிர்வாகம் பற்றி பேசுகின்றார்.

    ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுகின்றபொழுது, மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமானது, இடைக்கால நிர்வாகம் குறித்து கருத்துக்கள் ஏன் உருவாகுகின்றது என்றால், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழர்களுடைய முதலீடுகளை உள்ளுக்குள் கொண்டு வருவதுதான் மிக முக்கியமான நோக்கமாக இருக்கின்றது.

    பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற வடக்கு – கிழக்கு தமிழர்களுடைய பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, தற்காலிகமாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கினால், அதிலும் வடக்கு – கிழக்கு இணைந்ததாக உருவாக்கப்பட்டு அதனை உலக வங்கி, ஐ.எம்.எப். அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் நிதிக்கையாளுகைகள் உருவாக்கப்பட வேண்டும்.

    இப்பொழுது இருக்கின்ற நடைமுறைகள் போலவே, மத்திய அரசினுடைய திரைசேரிக்கூடாகத்தான் நிதியை பெற்று, வடக்கு கிழக்கிலே இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதென்றால், அது நடக்கக்கூடிய காரியமுமல்ல, அதுவொரு வீண்விரயமான காலமாகவும் மாறும்.

    சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுது எவ்வாறு உலக வங்கி நிதி கண்காணிப்பை மேற்கொண்டதோ, 1987ம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டபொழுது இந்தியா எவ்வாறானதொரு பொறுப்பை எடுத்துக்கொண்டதோ, அதேபோல இப்பொழுதும் வடக்கு கிழக்கு இணைந்த, இரண்டையும் இணைப்பாக மேற்கொள்கின்ற இடைக்கால நிர்வாகத்தை வடக்கு கிழக்கிற்கான பொருளாதார அபிவிருத்திக்காகவும், மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்காகவும் உருவாக்கப்படுகின்றபொழுது, இந்தியா பொறுப்பெற்க வேண்டும்.

    உலகநாடுகளிடம் சென்று கூட்டம் வைத்து, விடுதலைப்புலிகள் காலத்திலேயே எவ்வாறு பணங்களை சேகரிக்கலாம் என்ற தந்துரோபாயம் ரணிலிற்கு தெரிந்ததாக இருந்தது.

    இப்பொழுதும் அவர் அதே தந்துரோபாயத்தை புலம்பெயர் அமைப்புக்களை வைத்துக்கொண்டு, அதாவது, தான் தடை நீக்கிய அமைப்புக்கள் ஊடாக நிதியை உள்ளீர்க்கின்ற ஒரு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றார்.
    அவர் சொல்வது இதைய சுத்தியானதும், நேர்மையானதுமான இருந்தால், இடைக்கால நிர்வாகமானது தமிழர் தரப்பிடம் கையளிக்கப்பட வேண்டும்.

    தமிழர்கள் அதனை நேர்மையான வழியில் செய்வதற்கு இந்தியாவின் நேரடி நெறிப்படுத்தலும், உலக நிதி நிறுவனத்தின் பாதுகாப்பும் அதற்கு இருக்க வேண்டும்.

    அவ்வாறு இல்லாது இந்த இடைக்கால நிர்வாகம் இயங்க முடியாது என்பது, காலம் தந்த நிதர்சன உண்மையாகும்.- என்றார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

    2025-12-05
    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
    இலங்கை

    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

    2025-12-05
    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
    இலங்கை

    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

    2025-12-05
    பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

    2025-12-05
    Next Post
    லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

    லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.