• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/13
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை சேவையில் இணைத்திருக்கின்றது.

கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த்தை கடற்படையிடத்தில் அர்ப்பணித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரையாது மிகவும் முக்கியமானது. பல செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

அவர் தனது உரையில், ‘முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நான் சேவையில் அர்ப்பணிப்பதை இட்டு பெருமிதமடைகின்றேன்.

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இவ்வளவு பெரிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவை புதிய நம்பிக்கையால் நிரப்பியுள்ளது.

விக்ராந்த் போர்க்கப்பல் பெரியது மற்றும் பிரமாண்டமானது, விக்ராந்த் தனித்துவமானது, விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல, 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்திய கடற்படை, அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம் இது. விக்ராந்த் போர்க்கப்பல் நகரும் நகரம். விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது.

வளர்ச்சி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு இது முக்கிய நாள்’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்கள் இந்தியாவின் ‘வல்லரசு’ இலக்கை மிகவிரைவில் அடைவதற்கான முழுமையான வாயில்களைத் திறந்துள்ளதோடு, வளர்ச்சிப்பாதையில் தனது உறுதியான பயணத்தில் திடமாக உள்ளது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியா கொண்டிருக்கின்ற தீவிரமான கரிசனையையும், ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற இலக்கில் ஏனைய நாடுகளின் பாதுகாப்பிலும் விசேட அக்கறை கொண்டிருக்கின்றமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறான நிலையில், விக்ராந் போர்க்கப்பலின் சிறப்பம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது விசேடமாகின்றது.

இந்தக் கப்பலானது இந்திய கடற்படையிடத்தில் சேவையில் உள்ள போர்க் கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும்.

இப்பாரிய கப்பலை அமைக்கும் பணிகள், 2009இல் ஆரம்பமாகியிருந்தன. தசாப்தங்கள் கடந்து முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பனிகள் கொரோனா நெருக்கடிகளால் ஏற்பட்ட சவால்களையெல்லாம் கடந்து நவீன வசதிகளுடன் நிறைவுக்கு வந்திருக்கின்றன.

இந்த போர்க்கப்பலை கட்டமைப்பதற்காக பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்தபோர்க்கப்பலின் நீளம் 262 மீற்றர்களாகும்.

அகலம் 62 மீறறர்களாகும். 59 மீற்றர் உயரத்தையும் கொண்டிருக்கின்றது.  இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் தொன் எடையைத் தாங்குவதோடு, 7,500 நாட்டிக்கல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது.

இதில், 1,700 வீரர்கள் பயணிக்க முடியும் என்பதோடு கடற்படை வீர,வீராங்கனைகள் தங்குவதற்கு தனி இடவசதியுமுள்ளது.15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன.

இந்த கப்பலில் இருந்து ‘மிக்-29 கே’ போர்விமானங்கள், ‘கமோவ்-31’ ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது.

இந்தக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்டிகல் மைலாகும். அத்துடன், 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், மிதக்கும் சிறப்பு மருத்துவமனையும், இடம் பெற்றுள்ளது.

மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என்று மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

அத்துடன், இன்னொரு சிறப்பம்சமாக புதிய விக்ராந்த் போர்க்கப்பலுக்காக புதிய கொடியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய கொடியில் இருக்கும் சென்.ஜோர்ஜ் கிராஸ் நீக்கப்படுகிறது.

ஐ.என்.எஸ் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொடி இனி அனைத்து இந்திய கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961இல் பிரித்தானியாவிடமிருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் எனப் பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971இல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது.

பின் 1997இல் படையில் இருந்து விலக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபா செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர் கப்பல் 2013இல் வாங்கப்பட்டது. இதுவே இந்தியக் கடற்படையில் உள்ள ஒரேயொரு விமானம் தாங்கி போர் கப்பலாகும்.

இந்நிலையில் தான் விக்ராந் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை உருவாக்கியதன் மூலமாக, இந்தியா, சொந்த நாட்டில் போர்க்கப்பல்களை உருவாக்கும் வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்டவற்றின் பட்டியலில் இணைந்துள்ளது.

மேலும், இந்தியாவைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத வகையில் செயல்படும் அண்டை நாடுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து. இந்திய கடல் எல்லையில் வெற்றி வியூகம் வகுக்க ஐ,என்.எஸ். விக்ராந்த் உதவும் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

Next Post

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

Related Posts

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!
இந்தியா

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!
இந்தியா

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

2026-02-25
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!
இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
Next Post
இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

புதிய கதாப்பாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

வெளியானது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் ட்ரைலர்

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

0
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

0
இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

0
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

0
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

2026-03-01
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

2026-03-01
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

2026-03-01
இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

2026-03-01
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

2026-03-01

Recent News

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

2026-03-01
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

2026-03-01
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

2026-03-01
இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.