மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திவரும் நிலையில், நேற்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
விமானம் தரையிறங்குவது தொடர்பாக தகவல் அளிக்கும் கோபுரத்தில் இருந்த அதிகாரியிடம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் போதுமான வெளிச்சம் உள்ளதா என விமானி கேட்டுள்ளார்.
அதற்கு 3 கி.மீ., அளவுக்கு வெளிச்சம் உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், விமானம் தரையிறங்கும் அளவுக்கு காற்று மெதுவாக வீசுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதை ஏற்று 11வது ஓடுபாதையில் தரையிறங்கியபோது விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி அளித்த அதிகாரியின் கவன குறைபாடு மற்றும் போதுமான வெளிச்சம் இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும், விமானம் தரையிறங்க 5 கி.மீ., துாரத்துக்கு வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
இதேவேளை, முழுமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இல்லாத விமான ஓடுபாதை கொண்டது பாராமதி விமானநிலையம் என்பதும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














