• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு பணிப்புரை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/11
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
53
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் தமது வேலைகளை நிறைவு செய்து கொள்வதற்காக பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து அரச நிறுவனங்களுக்கு வருகின்றனர்.

இதற்குப் பதிலாக, அந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடி பதிலை வழங்கும் வினைத்திறனான செயன்முறையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் வழங்கியுள்ள ஆலோசனைப்படி, அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய, பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடனான விசேடக் கடிதம், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உடனடி பதில் வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், குறைந்தபட்சம் ஒரு வாரத்தினுள் இடைக்கால பதில் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நான்கு வாரங்களுக்குள் இதற்கான இறுதி பதிலை அனுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து உத்தியோகப்பூர்வ கடிதங்களுக்கும் பதிலளிக்கும்போது அக்கடிதத்தில் இடப்படும் கையொப்பத்திற்கு கீழ், அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்துடன் தொடர்புடைய பிரதானியின் நேரடி தொலைபேசி இலக்கம், தொலைநகல் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன குறிப்பிடப்பட வேண்டும்.

அலுவலகங்களின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களை தினமும் பார்வையிடும் அதேவேளை, அதற்குப் பொறுப்பாக உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்படவும் வேண்டும்.

அதேபோன்று மேலதிகாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களும் தினமும் பார்வையிடப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்னஞ்சல்களுக்கு வரும் கடிதங்களுக்கும் உடனுக்குடன் பதில் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அன்றைய தினமே மின்னஞ்சல் கடிதங்களுக்கு பதில் அனுப்ப முடியாமல் போனால், குறித்த கடிதம் கிடைத்திருப்பதாகவும் அதற்கான பதிலைப் பெற்று தருவதற்கு போதிய கால அவகாசத்தை வழங்குமாறும் குறிப்பிட்டு தற்காலிக பதிலொன்றை அனுப்புதல் வேண்டும். இதேபோன்று குறிப்பிடப்பட்ட திகதிக்கு முன்னதாக அதற்குரிய பதிலை வழங்க வேண்டும்.

அலுவலகத்துக்கு வரும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அதேநேரம், அதிக தொலைபேசி அழைப்புகள் வரும் நிறுவனம் / பிரிவில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கென விசேட உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் அலுவலகங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குறிப்பேடு ஒன்றும் கையாளப்பட வேண்டும். அதில் அழைப்பை மேற்கொண்டவரது பெயர், அழைப்புக்கான காரணம், மீண்டும் அவரை தொடர்பு கொள்வதற்கான இலக்கம் என்பன குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

உடனடி பதில் வழங்க முடியாத விடயங்களுக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட மேலதிகாரி அல்லது அவ்விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரியால் விரைவில் பதில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Related

Tags: கடிதங்கள்தொலைபேசி அழைப்புமின்னஞ்சல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் கடும்மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Next Post

படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

Related Posts

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!
இலங்கை

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

2025-12-14
UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் –  இம்ரான் எம்.பி  கோரிக்கை!
இலங்கை

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் – இம்ரான் எம்.பி கோரிக்கை!

2025-12-14
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!
இலங்கை

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!
இலங்கை

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!
இலங்கை

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
இலங்கை

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
Next Post
படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா

விதுர விக்ரம நாயக மற்றும் டக்ளஸ் ஆகியோர் திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம்!

விதுர விக்ரம நாயக மற்றும் டக்ளஸ் ஆகியோர் திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

0
UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் –  இம்ரான் எம்.பி  கோரிக்கை!

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் – இம்ரான் எம்.பி கோரிக்கை!

0
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

0
தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

2025-12-14
UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் –  இம்ரான் எம்.பி  கோரிக்கை!

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் – இம்ரான் எம்.பி கோரிக்கை!

2025-12-14
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14

Recent News

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

2025-12-14
UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் –  இம்ரான் எம்.பி  கோரிக்கை!

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் – இம்ரான் எம்.பி கோரிக்கை!

2025-12-14
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.