• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களைக் கூட தண்டிக்கும் அளவிற்கே அரசு செயற்படுகின்றது – ஜனா

987 Views
5 months ago
68 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    Subscriber

    ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாட்டில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களைக் கூட தண்டிக்கும் அளவிற்கே இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

    கடந்த ஜனவரி மாதம் கொக்கட்டிச்சோலைப் படுகொலை நினைவேந்தல் அனுஸ்டித்தமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தகவலறிந்து நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாடடின் ஜனநாயக ஆட்சி இன்று எங்களை நீதிமன்றம் வரை கொண்டு நிறுத்தியிருக்கின்றது. உண்மையிலேயே எங்களுக்கு பிடியானை இருப்பதாக யாருமே தெரிவிக்கவில்லை. நேற்றைய தினம் விவசாய அமைப்புக் கூட்டத்திற்காக கொக்கட்டிச்சோலை சென்ற போது அங்கு ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கும் தர்மலிங்கம் சுரேஸ் அவர்களுக்கும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினால் பிடியாணை இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    அதன்பின்னர் தான் விசாரித்த போது கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்று சொல்லப்படும் 1987ம் ஆண்டு காலகட்டத்திலே மகிழடித்தீவு இரால் பண்ணையைச் சுற்றியிருந்தவர்கள், இரால் பண்ணைக்குள் தஞ்சம் அடைந்தவர்கள், எந்தவித போராட்ட இயக்கங்களுடனும்; தொடர்புபடாத பொதுமக்களை இலங்கை அரச படைகள் கொன்று குவித்தனர்.

    அவ்வாறு கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவாக மகிழடித்தீவு சந்தியிலே அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபியிலே ஆண்டு தோறும் அவர்களை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவது வழமை.

    இந்த ஆண்டு ஜனவரியிலே கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கடும் கெடுபிடி இருந்தது. போராட்ட காலத்தில மரணித்த பொதுமக்களைக் கூட நினைவு கூரக் கூடாது என்கின்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது.

    2015 தொடக்கம் 2019 வரை எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு உரிமை இருந்தது. ஆனால் 2019லே ஆட்சிக்கு வந்த கோட்டபாய அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. அந்தக் காலகட்டத்திலே பொது மக்கள் நினைவுகளை அனுஸ்டிக்கத் தயங்கிய போது நாங்கள் கடந்த ஜனவரி மாதம் அவர்களை நினைவு கூர்ந்திருந்தோம்.

    அங்கு எம்மை நினைவு கூரக் கூடாது என்பதற்கான எவ்வ்வித நீதிமன்ற தடையுத்தரவுகளும் வழங்கப்படவில்லை. இருந்தும் நினைவுகூரலை மேற்கொண்டு நாங்கள் விளக்கேற்றும் போது கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் அங்கு வந்து இடையூறுகளை விளைவித்தனர்.

    இருந்தும் நாங்கள் அந்த நினைவேந்தலைச் செய்தோம். அவ்வாறு இந்நிகழ்வுக்கு அவர்களால் தடையுத்தரவு வழங்கப்படவில்லை என்பதோடு, தடைத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறியமைக்காக வைக்கப்பட்ட வழக்கிற்கான அழைப்பாணை எமக்கு வழங்கப்பட்டு நீதிமன்றம் செல்லாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை.

    நிகழ்வுக்கான தடையும் தரப்படவில்லை, வழக்கிற்கு வருமாறு அழைப்பாணையம் இல்லை, ஆனால் இடையில் எமக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அறியக் கிடைத்தது.

    அந்த நிலையில் நாங்கள் எமது சட்டத்தரணிகள் ஊடாக இன்றை தினம் வழக்கினை அழைத்து நீதிமன்றில் ஆஜராகியிருந்தோம். எதிர்வரும் பதினொராம் மாதம் இரண்டாம் திகதிக்கு வழக்கு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

    இந்த நாட்டில நடக்கின்ற விடயங்களை இந்த நாட்டு மக்கள் மாத்திரமலல்ல சர்வதேசமும் அறிந்து வைத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையககத்திலே 2012ம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு எதிராக மாறி மாறி பிரேரணைகள் வந்து கொண்டிருக்கின்றன.

    தற்போது இலங்கை பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ள இந்நிலையிலும் கடந்த வாரமளவில் ஐநா வில் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையில் போர்க்குற்றங்களோடு சேர்த்து பொருளாதாரக் குற்றங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

    இந்த வேளையிலே ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய இந்த நாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் எங்களைக் கூட தண்டிக்கும் அளவிற்கு இருக்கின்றது. இவ்வாறாக எங்களைப் பயமுறுத்துவதன் ஊடாக எமக்காக உயிர்நீத்த மக்களை நாங்கள் நினைவு கூருவதைத் தடுத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள்.

    அது முடியாத காரியம். நாங்கள் எமக்காக உயிர்நீத்த எமது மக்களை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து கொண்டே இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Share12Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி
    இலங்கை

    இரண்டு பிரதான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் – சாகர

    2023-03-20
    புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்
    இலங்கை

    மஹிந்த சிறிவர்தனவிற்கு 7 நாட்கள் அவகாசம் – பீரிஸ் எச்சரிக்கை

    2023-03-20
    ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரிக்கு எதிராக CID யில் முன்னிலையாக தயார் – பிரசன்ன ரணதுங்க
    இலங்கை

    தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!

    2023-03-20
    10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!
    இலங்கை

    மாத இறுதியில் இருந்து மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ – அமைச்சர்

    2023-03-20
    இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர
    இலங்கை

    மக்கள் ஆதரவுடன் மஹிந்தவை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – மொட்டு கட்சி!

    2023-03-20
    குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க
    இலங்கை

    எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் – சம்பிக்க

    2023-03-20
    Next Post
    வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை!

    வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.