• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது!

உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/24
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகின்றது.

காத்தற்கடவுளான மஹாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனனித்ததாக வரலாறு கூறுகின்றது.

துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணராய் அவதரித்தார்.

பாண்டவர்களின் தோழராய், பார்த்திபனின் சாரதியாய், குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.

வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார்.

நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

இந்தியா, இலங்கை, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இதேவேளை, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாட்டின் பல பாகங்களிலும் களை கட்டியுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் தலைநகர் கொழும்பிலும் இன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்ததுடன், இன்று காலையிலிருந்து மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

வவுனியாவிலும் மக்கள் தமது துயரங்களை மறந்து கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார் – திருக்கேதீஸ்வரத்தில் இன்று காலை இடம்பெற்ற தீபாவளி தினத்திற்கான விசேட பூஜைகளில் மக்கள் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

வட மேல் மாகாணத்தின் புத்தளம் – முந்தல் பிரதேசத்திலும் தீபாவளி விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், காலையிலிருந்து மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அவற்றிலும் அதிகளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தீபாவளி களைகட்டியுள்ளது. கோவில்களுக்கு சென்ற மக்கள் தமக்காகவும் தமது சமூகத்திற்காகவும் விசேட பூஜைகளில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பிலும் இதேவிதமாக மக்கள் கோவிலுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டதுடன், அங்கும் பெருமளவு மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மலையகத்திலும் மக்கள் தீபாவளி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒளி கண்டகலும் இருள் அரக்கன் போல், உள்ளங்கள் கொண்ட ஆணவமும் அகந்தையும் அகன்று, ஞானமும் கருணையும் ஒளிவீசிட அனைவருக்கும் ஆதவனின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Tags: அமாவாசைதீபாவளி பண்டிகைதீபாவளிப் பண்டிகை
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.
இலங்கை

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2023-03-26
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை
இலங்கை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

2023-03-26
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
இலங்கை

எண்ணெய் விலை மேலும் சரிவு !!

2023-03-26
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
இலங்கை

10 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு ஆரம்பம் – அரசியலமைப்பு பேரவை

2023-03-26
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
இலங்கை

மாகாண / உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்கள் நியமனம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் எச்சரிக்கை

2023-03-26
பிரதமர் தினேஷை சந்திக்க உள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு !!
இலங்கை

பிரதமர் தினேஷை சந்திக்க உள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு !!

2023-03-26
Next Post
தீபாவளி திருநாளை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் !

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் !

2023-03-26
துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

2023-03-26
தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2023-03-26
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

2023-03-26
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை மேலும் சரிவு !!

2023-03-26

Recent News

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் !

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் !

2023-03-26
துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

2023-03-26
தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

2023-03-26
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

2023-03-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.