• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு

திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
71 0
A A
0
34
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது.

இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது.

இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன.

இவ்வாறான தருணத்தில் ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோட்பாட்டின் கீழாக, இந்தியா வழங்கிய உதவிகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன.

அவ்வாறானதொரு நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறு தெரிவித்ததோடு, இந்தியாவுடனான நெருக்கமான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தினையும் பகிர்ந்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகார மட்ட உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியுள்ளது.

குறிப்பாக கடன் பெற்றுக்கொண்ட நாடுகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்து கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

விசேடமாக, பரிஸ் கிளப் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.

அத்துடன், இலங்கையின் கடன் வழங்குநர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

ஆனால் சீனா இதுவரையில் மௌனம் கலைக்கவில்லை. அது தனது முன்னைய முடிவான, தனது கடன்களை மீளச் செலுத்துவதற்கான புதிய வட்டியில் மீண்டும் இலங்கைக்கு கடன்வழங்குவதிலேயே கரிசனையாகவுள்ளது.

இதனால், தான், இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கான உறுப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கியபோதும், கடன்தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில் தான் திருகோணமலை துறைமுகம் மற்றும் நகரம் பற்றிய அபிவிருத்தி விடயத்தினை கையிலெடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

கேந்தரமுக்கியத்துவமான திருணோமலையின் அபவிருத்தியில் இந்தியாவை புறந்தள்ளிவட முடியாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகத்தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்.

குறிப்பாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியின் போது இந்தியாவை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்துக்கள் அதனை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

முன்னதாக,  திருகோணமலையில் உள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால் இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

அன்று எண்ணெயத் தாங்கிகளை வழங்கியிருந்தால் இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை காலியானதால் இன்று வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளும் காலியாகியுள்ளன.

இதனால் மக்களின் வயிறுகளும் காலியாகியுள்ளன. இனிமேலும் திருகோணமலை அபிவிருத்தியின் போது இந்தியாவை விட்டுவிட்டு பயணிக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தக் கூற்றுக்கள், இந்தியாவின் முதலீட்டின் ஊடாக, திருகோணமலையை கட்டியெழுப்புவதன் மூலமாக சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மீட்டுக் கொள்ளமுடியும் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியா நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் நான்கு, பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்தபோது இந்தியாவின் முதலீடு குறித்து வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, திருகோணமலைக்குச் சென்றிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே, திருகோணேஸ்வர ஆலத்தில் பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டதோடு, அவ்வாலயத்தின் அறங்காவலர் சபையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எதிர்கால அபிவிருத்திக்கு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் நேரில் விஜயம் செய்திருந்தார்.

குறித்த தாங்கிகள் இலங்கையின் சக்தித் தேவையினை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும் கொண்டிருக்கும் வகிபாகத்தை உயர் ஸ்தானிகர் விரிவாக ஆராய்ந்திருந்தார்.

அத்துடன் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன நிறுவனத்தால் அண்மையில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது உராய்வு நீக்கி உற்பத்தி ஆலை மற்றும் இயந்திர ஒயில் கலப்பு நிலையம் ஆகியவற்றையும் உயர் ஸ்தானிகர் பார்வையிட்டதோடு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மேல்நிலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகர் கரிசனை செலுத்தியுள்ளார்.

இதன்மூலம், திருகோணமலை பிரதேசத்தில் இந்தியா கூடிய சிரத்தை கொண்டு அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து விட்டது என்பது தான் பொருளாக உள்ளது.

அதேநேரம், இந்தியா, திருகோணமலையில் தனது பங்களிப்பை தொடர்ந்து கொண்டு உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

திருகோணமலையில் இந்தியா, தனியே, எண்ணெய் தாங்கிகளை மையப்படுத்திச் செயற்படவில்லை.

அதனையும் கடந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாகவே, கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே மற்றும் விமானப் படை அக்கடமியின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோரையும் உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின்போது, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு பங்களிப்பினை வழங்கவும் இலங்கையின் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குமாக 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டோனியர் விமானத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆயுதப்படையினருக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்திய கடற்படையினரின் தொழில்நுட்ப பிரிவினருடனும் உயர் ஸ்தானிகர் சம்பாசனையில் ஈடுபட்டு இந்தியாவின் பூரணமாக ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆலோசனைகளை அளித்துள்ளார்.

ஆக, இந்தியா, பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால், பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.

Related

Tags: எழுச்சிதிருகோணமலை துறைமுகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்க தீர்மானம்!

Next Post

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!
இலங்கை

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!
இலங்கை

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

2025-12-03
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!
இலங்கை

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

2025-12-03
Next Post
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் - மஹிந்த

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பில் இன்று 12 மணிநேரம் நீர்வெட்டு!

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.