• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணி கைது!

shagan by shagan
2022/11/11
in இலங்கை
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.
பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தமது புலன்விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.

மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று மன்று கேள்வி எழுப்பியது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்பிற்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான் வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு
இலங்கை

உணவுப் பொதியின் விலையை குறைக்க வலியுறுத்து !!

2023-03-27
யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2023-03-27
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்: மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை
இலங்கை

பால்மாவின் விலை குறைப்பு … தேநீரின் விலை குறைந்தது !!

2023-03-27
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!
இலங்கை

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

2023-03-27
பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!
இலங்கை

பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!

2023-03-27
பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து
இலங்கை

பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

2023-03-27
Next Post
கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

யாழில்.குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு

உணவுப் பொதியின் விலையை குறைக்க வலியுறுத்து !!

2023-03-27
யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2023-03-27
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்: மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை

பால்மாவின் விலை குறைப்பு … தேநீரின் விலை குறைந்தது !!

2023-03-27
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

2023-03-27
கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

2023-03-27

Recent News

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு

உணவுப் பொதியின் விலையை குறைக்க வலியுறுத்து !!

2023-03-27
யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2023-03-27
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தேநீர் குடிப்பதை நிறுத்துங்கள்: மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை

பால்மாவின் விலை குறைப்பு … தேநீரின் விலை குறைந்தது !!

2023-03-27
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

2023-03-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.