சுகந் இன்ரனாசினல் நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக யாழில் திறந்து வைத்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்பாபினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



















