• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தலாய்லாமாவினால் வரமுடியுமா?

தலாய்லாமாவினால் வரமுடியுமா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/09
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் அனுசரணையில் கடந்த டிசெம்பர் இறுதி வாரத்தில் புத்தகாயவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பௌத்த பிக்குகள் குழுவொன்று, திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.

ராமன்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாகுல்வௌ விமல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களைச் சேர்ந்த பௌத்த பிக்குகள், கடந்த 27ஆம் திகதி புத்தகாயவில் தலாய்லாமாவைச் சந்தித்திருந்தனர்.

இதன்போதே அவர்கள் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

தேரர்கள் தலாய்லாமாவை இலங்கைக்கு அழைத்தமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது தலாய்லாமா இதுவரையில் இலங்கைக்கு விஜயம் செய்தது கிடையாது.

கௌதம புத்தர் காலடி பதித்த நாடான இலங்கைக்கு தலாய்லாமா போன்றவர்கள் வருகை தவருவதானது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் அவர் இதுவரையில் வந்திருக்கவில்லை.

அடுத்ததாக, புத்தகாயவுக்கு தலாய்லாமா சென்றிருந்த போது, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். வழக்கத்துக்கு மாறான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தமை இலங்கை பௌத்த பிக்குகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

தலாய்லாமாவின் பேச்சைக் கேட்பதற்காக குவிந்த மக்கள், இலங்கைக்கு வந்தால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்குத் தீரும் என்பது, பௌத்த பிக்குகளின் கணக்காக இருக்கலாம்.

முன்னதாக தலாய்லாமாவை 2015ஆம் ஆண்டிலும் பௌத்த பிக்குகள் இலங்கைக்கு அழைத்திருந்தனர்.

ஆனால் மைத்திரி அரசாங்கம் அவருக்கு வீசா வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் அப்போது அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது.

இப்போது மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர் அதனை ஏற்றுக் கொண்டு இலங்கை வருவது அரசாங்கத்தின் கையிலேயே இருக்கிறது. தலாய்லாமா ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்தாலும், அவருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டாலும், அவருக்கான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி இலங்கை ஒரு பௌத்த நாடு என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும், உலகப் பௌத்தர்களால் ஆன்மீகத் தலைவராக கொண்டாடப்படும் தலாய்லாமாவை இங்கு வரவும் முடியவில்லை.

அவரை அழைத்து வரவும் முடியவில்லை. ஆகவே அவரை அழைத்து வருவதற்கு தடையாகவுள்ள விடயங்களை முதலில் பௌத்த பிக்குகள் முதலில் அடையாளம் காண வேண்டும்.

தலாய்லாமா போன்ற ஆன்மீகத் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு பெருந்தடையாக இருப்பது பூகோள அரசியல் தான்.

குறிப்பாக கூறுவதானால், சீனா தான் பெரும்பிரச்சினையாக இருக்கின்றது. இம்முறையும் அழைப்பு விடுக்கப்பட்டாலும் சீனா நிச்சயமாக தனது வேலைகளை ஆரம்பித்திருந்கும் என்பது தான் யதார்த்தம்.

ஏனென்றால், சீனாவைப் பொறுத்தவரையில், தலாய்லாமாவை இந்தியாவுக்குள் முடக்குவதற்கு சீனா தனது உச்சபட்ச இராஜதந்திர அணுகுமுறைகளை கையாளுகிறது.

திபெத் அல்லது, தாய்வான் பிரிவினையை ஆதரிக்காத, ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள உலக நாடுகளை சீனா வலியுறுத்துகிறது.

அதற்காக தன்னிடம் உள்ள பொருளாதார அல்லது வேறு பல சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

இலங்கை சீனாவுடன் கொண்டிருக்கும் பாரம்பரிய நட்புறவின் காரணமாக, திபெத் அல்லது தாய்வானை அங்கீகரிக்க தயங்குகிறது.

திபெத் ஒரு பௌத்த புனித பிரதேசமாக இருந்தாலும், தலாய்லாமா ஒரு பௌத்த ஆன்மீக தலைவராக இருந்தாலும், இலங்கை அவருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வருகிறது. அதற்கு முழுக் காரணம் சீனாவுடன் கொண்டிருக்கும் உறவு தான்.

திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக இருப்பவர் தலாய்லாமா. அவர் திபெத் மக்களின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்.

ஆனால் திபெத்தை கைப்பற்றி தனது சுயாட்சிப் பிரதேசமாக அறிவித்திருக்கிறது சீனா.

இதன் பின்னரே, திபெத் மக்களால் கடவுளின் அவதாரமாக போற்றப்படுகின்ற 14ஆவது தலாய்லாமா, 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் தேடினார்.

அவருக்கு தர்மசாலாவில் இடமளித்து, நிழல் அரசு ஒன்றை நடத்துவதற்கு இந்தியா அங்கீகாரமும் அளித்திருக்கிறது.

அதேநேரம் தலாய்லாமா உயிருடன் இருக்கும் வரை தான் திபெத்தின் சுதந்திரக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கும் என்று சீனா நம்புகிறது.

அதனால் தான், அடுத்த தலாய்லாமாவாக கருதப்படும் பஞ்சன்லாமாவை சீனா கடத்தியுள்ளதோடு 1995 முதல் பொதுவெளியில் அவர் காணப்படவில்லை.

அவர் என்னவானார் என்றும் தெரியாத நிலைமை நீடிக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் தலாய்லாமாவை, இலங்கை அழைத்து வந்து, உரிய மரியாதைகளை வழங்குவதை சீனா வெறுப்புடன் தான் பார்க்கும்.

ஆகவே, இந்த தடையை உடைத்தெறிந்து தலாய்லாமை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாகவே பௌத்தத்தின் இலங்கையில் உள்ள மேன்மைகளை தலாய்லாமா ஊடாக வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்காலமும்!

Next Post

சுதந்திரத்தின் பின்னரான வலுவான இந்திய, இலங்கை உறவுகள்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
இலங்கை

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
Next Post
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

சுதந்திரத்தின் பின்னரான வலுவான இந்திய, இலங்கை உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

“எம்மிடமிருந்து எம்மவர்க்கு” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் சுத்திகரிக்கும் பணி முன்னெடுப்பு!

"எம்மிடமிருந்து எம்மவர்க்கு” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் சுத்திகரிக்கும் பணி முன்னெடுப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

2026-06-18

Recent News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-19
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.