அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இது சந்தர்ப்பம் அல்ல என முன்னாள் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2018 முதல் 2021 வரை அமெரிக்க இராஜாங்க செயலாளராக பாம்பியோ பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மைக் பொம்பியோ ட்ரம்பின் கொள்கைகளை விமர்சித்து கருத்துகளை வெளியிட்டதுடன், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.