டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜப்பானின் ஜோடோ தீயணைப்பு நிலையத்தால் இந்தியப் பெண்மணியான தீபாலி ஜாவேரிக்கு விருது வழங்கப்பட்டது.
அதனை வரவேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குறித்த விருது தொடர்பில் தெரிந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் சரியான நேரத்தில் உதவி வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகமானது, ‘ஜப்பானில் வசிக்கும் இந்தியரான திருமதி தீபாலி ஜாவேரி மற்றும் ஓட்டா ஆகியோர் கடந்த ஒக்டோபரில் டோக்கியோவில் உள்ள டாண்டியா மஸ்தி ஒருவரைக் காப்பாற்றியதற்காக ஜோட்டோ தீயணைப்பு நிலையத்தால் விருதுகள் வழங்கப்பட்டன.
2022 இல் ஜப்பானில் நவராத்திரியின் கர்பா நிகழ்வின் போது ஒரு நபரின் இதயத் துடிப்பு திடீரென நின்றது.
இருப்பினும், கர்பா நடனமாட வந்த தீபாலி ஜாவேரி, உடனடியாக உயிர்காக்கும் நடவடிக்கைகளைச் செய்து அவரது உயிரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


















