காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, இலங்கையால் மாத்திரம் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை பசுமைப் பொருளாதாரமாக நிலைநிறுத்துவதற்கு புதிய சட்டம் தேவை எனவும், எதிர்வரும் ஆண்டில் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
















