சீனாவின் வர்த்தக புள்ளிவிவரங்கள் ஏமாற்றம் அளித்ததால் ஹொங்கொங் மற்றும் சீனா ஆகியவற்றின் பங்குச்சந்தைகளில் ஏப்ரல் மாதத்தில் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
சீனாவின் இறக்குமதிகள் ஏப்ரல் மாதத்தில் 7.9சதவீதமாக குறைவடைந்துள்ளது, அதேநேரத்தில் ஏற்றுமதி 5.8சதவீதம் மெதுவான வேகத்தில் உயர்ந்துள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் 14 சதவீதத்திற்கும் மேலாக குறைடைவந்தள்ளன.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்த அந்நாட்டின் இறக்குமதியும் இக்காலகட்டத்தில் 2 சதவீதம் குறைந்துள்ளது.
சீனாவின் பல முக்கிய வர்த்தக பங்காளிகள் ‘மந்தநிலை அபாயங்கள்’ அதிகரித்து வருவதை அடுத்து, அரசாங்க அதிகாரிகள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை சீனாவின் ஹாங்செங் குறியீடு 429புள்ளிகள் சரிந்து 19,867 ஆக இருந்தது, அதேசமயம் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 1.1 சதவீதத்தை இழந்தது, ஹொங் செங் டெக் இன்டெக்ஸ் 3சதவீதம் சரிந்தது, டென்சென்ட் (0700) 3.6 சதவீதம் சரிந்தது.
மிகப்பெரிய உற்பத்தியாளரான சுசானோ, அதன் தயாரிப்புகளை யுவான் விலையில் சீனாவிற்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலிப்பதாகக் அறிவித்துள்ளமையும் இந்த நிலைமையை உறுதிப்படுத்துகின்றது.
சீனாவின் நாணயத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால் சிறிய வாடிக்கையாளர்களுக்கு யுவானுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன என்று சுசானோ தலைமை நிர்வாகி வால்டர் ஷால்கா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் சீனாவின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. இது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மறைமுக சமிக்ஞையை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.