ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’ என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
நாடு துரோகத்தை எதிர்கொள்கிறது என்றும் இதற்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்திற்கு உரிய அனைத்து உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாக்னர் கிளர்ச்சியானது இராணுவத்தின் முதுகில் குத்தும் செயற்பாடு என்றும் கண்டித்துள்ளார்.
மேலும் வாக்னர் தலைவர் கைப்பற்றியதாக கூறப்படும் தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் நிலைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.