• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
வளர்ந்துவரும் சிம்பாப்வே அணியை சுலபமாக எண்ணிவிடக் கூடாது: புதிய தலைவர் மெஸ்டிஸ் கருத்து!

வளர்ந்துவரும் சிம்பாப்வே அணியை சுலபமாக எண்ணிவிடக் கூடாது: புதிய தலைவர் மெஸ்டிஸ் கருத்து!

Anoj by Anoj
2024/01/05
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வளர்ந்துவரும் சிம்பாப்வே கிரிக்கெட் அணியை சுலபமாக எண்ணிவிடக் கூடாது என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான ஊடக சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ், பல விடயங்களை தெளிவுப்படுத்தியிருந்தார்.

முழுநேர அணித்தலைவராக பதவியேற்றுள்ள குசல் மெண்டிஸ், புதிய தேர்வுக்குழுவுடன் சிறந்த புரிந்துணர்வு உள்ளதாகவும் கடந்த காலங்களில் உபுல் தரங்க, கண்டம்பி மற்றும் சனத் ஜயசூரியவுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சதீர சமரவிக்ரம உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்த தொடரில், சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், கடந்த காலங்களில் களத்தடுப்பில் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்வரும் தொடரில் சிறப்பாக விளையாடுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார். (குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில், இலங்கை அணி வீரர்கள் 16 பிடியெடுப்புகளை தவறவிட்டிருந்தனர்)
அதேபோல, கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்காத முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக, அதே துடுப்பாட்ட வரிசையில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், முன்னர் அவர் உபாதையில் இருந்ததே சிறப்பாக பிரகாசிக்க தவறியமைக்கு காரணம் எனவும் மெண்டிஸ் தெளிவுப்படுத்தினார்.

எனினும், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் வழமை போல 3ஆவது வீரராகவே களமிறங்கவுள்ளதாகவும் பெரும்பாலும் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறினார்.

ஒருநாள் தொடரில், இடம்பெறாத சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக, சஹான் ஆராச்சிகே அல்லது நுவனிந்து பெனார்டோ ஆகியோரில் ஒருவர் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

உபாதையில் இருந்து மீண்டுள்ள ரி-20 அணியின் தலைவரும் சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, 2 அல்லது 3ஆவது போட்டியில் அணியுடன் இணைவார் எனவும் நீண்ட காலத்துக்கு பிறகு அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள ஜெப்ரி வெண்டர்சே கடந்த காலத்தை விட தற்போது சிறந்த நிலையை எட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: குசல் மெண்டிஸ்சிம்பாப்வே கிரிக்கெட் அணிபுதிய தேர்வுக்குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு புதிய தடை!

Next Post

இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்போம் – சிம்பாவே அணி தலைவர்

Related Posts

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக சர்ச்சை!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

2025-11-29
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!
கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

2025-11-29
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

2025-11-28
Next Post
இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்போம் – சிம்பாவே அணி தலைவர்

இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்போம் - சிம்பாவே அணி தலைவர்

இலங்கைக்கு மீண்டும் கார் இறக்குமதி-வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

இலங்கைக்கு மீண்டும் கார் இறக்குமதி-வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

பொதுக் கழிப்பறையில் விஷப்பாம்பு!

பொதுக் கழிப்பறையில் விஷப்பாம்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

0
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

0
பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

0
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

0
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

2025-12-03
பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

2025-12-03
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-03
இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!

2025-12-03

Recent News

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகள்!

2025-12-03
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!

2025-12-03
பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு!

2025-12-03
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.