ஐ.பி.எல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
இன்னிலையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
அதன்படி நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது
அதன்படி முதல் இன்னிங்சில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் 175 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது.