2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் அதனை நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்புடைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.