18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு இலங்கை நேரப்படி 7.30 க்கு நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.எவ்வாறு இருப்பினும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3 வெற்றி 5 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
இறுதி 2 ஆட்டங்களில் பஞ்சாப், குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்த கொல்கத்தா அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் ஆர்வத்துடன் உள்ளது.
இதேவேளை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் குறித்த இரு அணிகளும் மோதும் இப் போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.