• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை – பிரதமர்

வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை – பிரதமர்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் போட்டி குழுக்களுக்கு வெவ்வேறு நலன்கள் உள்ளன என்பதையும், இது எதிர்க்கட்சியின் அரசியல் இருப்புக்கான விடயம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எங்களுக்கு இருப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சரியான நிர்வாக முறைமை இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருப்பதைக் கண்டேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் சஜித் பிரேமதாச டிசம்பர் மாதத்திற்குள் தான் ஜனாதிபதியாகிவிடுவேன் என்றார். இந்த கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.

நகைச்சுவையான இத்தகைய கருத்துக்களை நாம் அனுதாபத்துடன் பார்த்து நம் வழியில் செல்ல வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது பயணம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய எமக்குத் தேவையான குழுவை தெரிவுசெய்து அனுப்புவதுதான்.

ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து அரசியல் கலாசாரத்தில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை.

மேலதிக செலவுகள், வீண் விரயம் மற்றும் திருட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் நாம் யாரையும் திருடியதாகக் குற்றம் சாட்ட முடியாது.

தற்போது கண்டிக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வரலாற்றில் முதல்முறையாக, கண்டிக்குச் சென்று புனித தந்தத்தை வழிபடும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் மக்கள் பள்ளிவாயல்களையும் வர்த்தகஸ்தாபனங்களையும் திறந்துகொடுத்துள்ளனர். நாட்டு மக்களிடையே அத்தகைய ஐக்கிய உணர்வு எழுந்துள்ளது.

எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், இன்னும் மேலே சென்றால், குறைந்தபட்சம் இந்த கல்வி முறையில் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் முறையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் பொருள், இது ஒரு பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

பாடசாலைகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. சிறந்த பாடசாலைகளுக்கும் அவ்வாறல்லாத பாடசாலைகளுக்கும், பிரபலமான பாடசாலைகளுக்கும் பிரபலமற்ற பாடசாலைகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது. உயர்தரப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. அவர்கள் பாடசாலைக்குச் செல்வது தமது பெயரைப் பதிவேட்டில் சேர்த்து, பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு மட்டுமே. ஆண் பிள்ளைகள் வேகமாக கல்வியை பாதியில் இடைநிறுத்தி வருகின்றனர். பாடசாலைகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன. கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தேவையான குணங்களையும் ஆன்மீக வளர்ச்சியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

இதை மாற்ற நாம் தலையிட வேண்டும். பின்னர், கல்வி மூலம், இந்தப் பொருளாதாரத்திலும் இந்த அபிவிருத்தித் திட்டத்திலும் ஈடுபடக்கூடிய திறன்களைக் கொண்டவர்களை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் வழங்கப்படுவது பயிற்சி அல்ல, அது பகிடி வதை போன்ற ஒன்று. தங்குமிட வசதிகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, கற்றல் வசதிகள் இல்லை, பதினைந்து ஆண்டுகளில் பாடத்திட்டம் மாறவில்லை, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்ற கற்பித்தல் விரிவுரையாளர்கள் இல்லை. இதையெல்லாம் நாம் சரிசெய்ய வேண்டும்.

ஜெர்மனியில், ஒரு ஆசிரியர் 9 வருட பயிற்சியின் பின்னரேயே பிள்ளைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் எமது நாட்டில் என்ன செய்கிறார்கள்? அந்த சூழ்நிலை இல்லாவிட்டாலும், தற்போதைய நிலையிலிருந்து முன்னேறுவதற்குத் தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் முறையாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.

பாடசாலைகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மேலும், பிரிவெனா கல்வியில் பல கடுமையான பிரச்சினைகள் உள்ளன. அது பற்றி சரியாக ஆராய்ந்து, தேவைகளை அடையாளம் காணவும், தேவையான பரிந்துரைகளை உடனடியாக வழங்கவும் ஒரு குழு இப்போது நியமிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பிக்கப்படும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரபலமடைவதற்கோ அல்லது வாக்குகளைப் பெறுவதற்கோ செய்யப்படவில்லை, மாறாக நம் நாட்டில் கல்வியை மேம்படுத்தும் உண்மையான நோக்கத்துடன் செய்யப்படுகிறது. கிராமிய மட்டத்தில் இவை அனைத்தையும் செயற்படுத்த களத்தில் தூய்மையான தலைமை மிகவும் முக்கியம்.

மே 6 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Related

Tags: Harini AmarasuriyaTeachersஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடுவர பஹகனுவ பகுதியில் மண்சரிவு; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்!

Related Posts

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!
இங்கிலாந்து

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 
உலகம்

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது
இங்கிலாந்து

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!
இங்கிலாந்து

விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

2025-12-03
அனர்த்தம் காரணமாக  மூடப்பட்டிருந்த  பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!
இலங்கை

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

2025-12-03
Next Post
கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்!

கண்டியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

உள்ளூராட்சி தேர்தல்; 30 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி தேர்தல்; 30 வேட்பாளர்கள் கைது!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

0
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

0
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

0
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

0
விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

0
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

விவசாயப் பண்ணைகளுக்கான பாரம்பரிய வரி திட்டத்திற்கு எதிராக கிராமிய தொழிற்கட்சியினர் கிளர்ச்சி!

2025-12-03

Recent News

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.