• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அகமதாபாத்தில் நிறைவுக்கு வந்த 18 வருட காத்திருப்பு; சம்பியனானது RCB!

அகமதாபாத்தில் நிறைவுக்கு வந்த 18 வருட காத்திருப்பு; சம்பியனானது RCB!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/04
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பயணத்தில் 18 வருட காத்திருப்பானது 2025 ஜூன் 03 ஆம் திகதி அகமதாபாத்தில் முடிவுக்கு வந்தது.

விராட் கோலிக்கும் அவரது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், அணியின் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கும் இது பரவசத்தின் உச்ச தருணமாக அமைந்தது.

அதேநேரம், 2025 ஐ.பி.எல். சீசன் முழுவதும் எதிர்பார்ப்புகளை மீறிய பஞ்சாப் கிங்ஸுக்கு, இறுதிப் போட்டியானது மற்றொரு மன வேதனையாக அமைந்தது.

பல ஆண்டுகளாக தவறவிட்ட வாய்ப்புகள் தோல்விகளின் போதும், ஏமாற்றங்களின் போதும், அணிக்கு உறுதுணையாக இருந்த பெங்களூருவின் விசுவாசமான ரசிகர்களுக்கு ரஜத் படிதர் மற்றும் அவரது வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர்.

நீண்ட அதேநேரம், வேதனையான காத்திருப்பு ஒரு அற்புதமான போட்டியுடன் முடிவுக்கு வந்ததால், இறுதி பந்து வீசப்படுவதற்கு முன்பே, விராட் கோலியால் தனது உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை.

20 ஓவர்களின் நிறைவில் முன்னாள் அணித் தலைவர் இறுதியாக வெற்றியை ருசித்தார்.

RCB அணி வெற்றியை ருசித்த பின்னர், கண்ணீருடன் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை அன்புடன் கட்டியணைத்தார்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அவரது முன்னாள் அணி வீரர்களான ஏ.பி.டி.வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் விராட் கோலியின் சிறந்த ஐ.பி.எல். தருணத்தில் அவருடன் இணைந்து அதை இன்னும் சிறப்பானதாக்கினர்.

Image

நேற்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ரஜத் படிதர் தலைமையிலான RCB அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் வீழ்ந்தமையினால் அவர்களால் மிகப்பெரிய இலக்கினை முன்னேற முடியவில்லை.

20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை விட 15-20 ஓட்டங்கள் குறைவாகவே அமைந்தது.

RCB அணிக்காக அதிகபட்சமாக 35 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.

பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதி மூன்று ஓவர்களில் வெறும் 22 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை சிறப்பாகக் கடைப்பிடித்தனர்.

பந்து வீச்சில் PBKS அணிக்கு அர்ஷ்தீப் சிங் (40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்) மற்றும் கைல் ஜேமிசன் (48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்) ஆகியோர் முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

191 என்ற இலக்கினை துரத்தியாடிய ஷரேயஸ் ஐயர் தலைமையிலான PBKS அணியானது இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் சரிந்தது.

Image

ஷஷாங்க் சிங் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் மட்டுமே RCB இன் பந்துவீச்சு தாக்குதலில் ஆதிக்கம் செலுத்த முயன்றனர்.

PBKS அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் புகுந்தனர்.

இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ஓட்டங்களிலும் ஆட்மிழந்தனர்.

தொடர்ந்து களம் புகுந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார்.

அவர் 39 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஓரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இதில் வதேரா 15 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ஓட்டத்துடனும், ஓமர்சாய் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார்.

RCB அணிக்காக அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

குருனால் பாண்டியா இந்த இன்னிங்ஸில் தனது திறமையை நிரூபித்தார்.

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற ஒரே வீரர் ஆனார்.

2017 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் சிறந்த விருதை வென்றிருந்தார்.

Image

Image

Related

Tags: BengaluruIPLRCBVirat Kohliஅகமதாபாத்சாம்பியன்பெங்களூருவிராட் கோலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

பிலியந்தலை பகுதியில் தீ விபத்து!

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
Next Post
பிலியந்தலை பகுதியில் தீ விபத்து!

பிலியந்தலை பகுதியில் தீ விபத்து!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16!

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16!

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் அபார வெற்றி!

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் அபார வெற்றி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16

Recent News

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

2026-03-16
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.